அரசு வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி - கோவையில் தாய், மகன் கைது

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிர்வாக பிரிவு அதிகாரி வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.36 லட்சம் வரையில் மோசடி செய்த வழக்கில், மேட்டுப்பாளையம் தாசனூரை சேர்ந்த மோகன்குமார், அவரது தாய் மணி என இருவரை கைது செய்தனர். இருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாசனூர் பகுதியை சேர்ந்தவர் மோகன்குமார்(வயது32). இவருடைய தாயார் மணி(வயது53). மனைவி சோபனா(வயது27). இவர்கள், தங்களுக்கு உயர் பதவியில் தெரிந்த நபர் இருப்பதால், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிர்வாக பிரிவு அதிகாரியாக வேலை வாங்கித்தருவதாக தெரிவித்துள்ளனர். இதனை நம்பி பலரும் லட்சக்கணக்கில் பணம் கொடுத்துள்ளனர்.

மேலும், வேலைக்கான போலி ஆணைகளையும் தயார் செய்து பணம் கொடுத்தவர்களிடம் கொடுத்தள்ளனர். இதனை, கோவை ஆட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு வந்தபோதுதான் அது போலியான ஆணை என்று தெரியவந்தது. இதையடுத்து, பணத்தை கொடுத்தவர்கள் அதனைத் திரும்பக் கேட்டும் அவர்கள் பணத்தை கொடுக்கவில்லை என்று தெரிகிறது.

மேலும், வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ஏராளமானவர்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த பணத்தின் மூலம் வேன் மற்றும் கார்களை வாங்கி மோகன்குமார் வாடகைக்கு விட்டு வந்துள்ளார். இந்த மோசடி குறித்து கவுண்டம்பாளையத்தை சேர்ந்த பூபதி என்பவர் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். ரூ.36 லட்சத்து 7 ஆயிரத்தை பலரிடமும் வசூலித்து மோகன்குமாரிடம் கொடுத்ததாகவும் ,ஆனால் அவர் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் அந்த புகாரில் கூறியிருந்தார்.

இந்த மோசடி குறித்து மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் உத்தரவின்பேரில், ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த மோகன்குமார், அவருடைய தாயார் மணி ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.20 லட்சம் மதிப்புள்ள வேன் பறிமுதல் செய்யப்பட்டது. இவருடைய மனைவி சோபனாவிடமும் விசாரணை நடைபெற்றுவருகிறது.

இந்த மோசடிக்கு பயன்படுத்திய போலி ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. தாயும், மகனும் மேலும் பலரிடம் இதுபோன்ற மோசடியை அரங்கேற்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதோடு, கைதான தாய், மகன் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...