சேலம் ரயில் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சிறப்பு தூய்மைப் பணிகள்

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் இந்திய ரயில்வேயினால் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வரும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் துப்புறவுப் பணிகளின் ஒரு பகுதியாக இன்று (23.02.2017) சேலம் ரயில்நிலையத்தில் சிறப்பு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.



நிரங்காரி பாபா ஹர்தேவ் சிங் அவர்களின் 63-வது பிறந்த நாள் நினைவை ஒட்டி நடைபெற்ற இந்த சிறப்பு தூய்மைப் பணிகளில், சந்த் நிரங்காரி அறக்கட்டளையின் 45 தன்னார்வத் தொண்டர்கள் ரயில்வே ஊழியர்களுடன் கலந்து கொண்டு தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். 



சேலம் கோட்ட உதவி வணிக மேலாளர் எம். ஷாஜஹான் மற்றும் உதவி சுகாதார அலுவலர் எஸ்.குமார் ஆகியோர் இந்நிகழ்விற்கு தலைமை வகித்தனர். 



இந்திய ரயில்வேயில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணிகளில் சந்த் நிரங்காரி அறக்கட்டளையின் பங்களிப்பை பாராட்டிய சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரி சங்கர் வர்மா, சேலம் கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் இத்தகு சிறப்பு தூய்மைப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.



Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...