தாராபுரம் அருகே ஓலைக்குடிசையில் மதுகுடிப்பகம் - தீவிபத்து அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகார்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தச்சன்புதூரில் எளிதில் தீப்பற்றக்கூடிய தென்னங்கீற்றில் குடில் அமைத்த குடிசையில் மதுகுடிப்பகம் செயல்படுகிறது. எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்கும் முன்னரே டாஸ்மாக் மண்டல மேலாளர் மற்றும் போலீசார் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: தாராபுரம் வட்டார பகுதியில் 10-க்கும் மேற்பட்ட அரசு மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதில், தச்சன்புதுரில் டாஸ்மாக் பார் ஓலை குடிசையில் இயங்கி வருகிறது. தற்போது, வெயிலின் தாக்கம் அதிகரித்து மக்களை வாட்டிவதைத்து வருகிறது.



இந்த நிலையில், எளிதில் தீப்பற்றக்கூடிய தென்னங்கீற்றில் குடில் அமைத்து மதுபார் செயல்படுவதால் அங்கு மதுப்பிரியர்கள் மது அருந்தும்போது, குடிபோதையில் சிகரெட், பீடி பிடித்துவிட்டு, அதை அணைக்காமல் அப்படியே கீழே போட்டு செல்கின்றனர்.



இது காற்றில் பறந்து கூரையின் மீது விழுந்தால் எந்த நேரமும் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக அந்தப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்கும் முன்னரே டாஸ்மாக் மண்டல மேலாளர் மற்றும் போலீசார் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுவிலக்கு அமலாக்கத்துறை அலுவலகம் அருகிலேயே ஓலைக்குடிசையில் மதுகுடிப்பகம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...