தாராபுரம் அருகே ஓலைக்குடிசையில் மதுகுடிப்பகம் - தீவிபத்து அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகார்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தச்சன்புதூரில் எளிதில் தீப்பற்றக்கூடிய தென்னங்கீற்றில் குடில் அமைத்த குடிசையில் மதுகுடிப்பகம் செயல்படுகிறது. எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்கும் முன்னரே டாஸ்மாக் மண்டல மேலாளர் மற்றும் போலீசார் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: தாராபுரம் வட்டார பகுதியில் 10-க்கும் மேற்பட்ட அரசு மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதில், தச்சன்புதுரில் டாஸ்மாக் பார் ஓலை குடிசையில் இயங்கி வருகிறது. தற்போது, வெயிலின் தாக்கம் அதிகரித்து மக்களை வாட்டிவதைத்து வருகிறது.



இந்த நிலையில், எளிதில் தீப்பற்றக்கூடிய தென்னங்கீற்றில் குடில் அமைத்து மதுபார் செயல்படுவதால் அங்கு மதுப்பிரியர்கள் மது அருந்தும்போது, குடிபோதையில் சிகரெட், பீடி பிடித்துவிட்டு, அதை அணைக்காமல் அப்படியே கீழே போட்டு செல்கின்றனர்.



இது காற்றில் பறந்து கூரையின் மீது விழுந்தால் எந்த நேரமும் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக அந்தப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்கும் முன்னரே டாஸ்மாக் மண்டல மேலாளர் மற்றும் போலீசார் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுவிலக்கு அமலாக்கத்துறை அலுவலகம் அருகிலேயே ஓலைக்குடிசையில் மதுகுடிப்பகம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...