பழனி புதிய மாவட்டத்தில் உடுமலை இணைப்பா? - சமூக வலைதளங்களில் பரவும் தகவலால் பரபரப்பு

திண்டுக்கல்லை பிரித்து பழனி தனி மாவட்டமாக உருவாக்கும்பட்சத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலையும் பழனியுடன் இணைப்படவுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவிவரும் தகவலால் மக்களிடையே பரபரப்பு நிலவிவருகிறது.


திருப்பூர்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படவுள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாக வாய்ப்புள்ளது எனவும், திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து ஒட்டன்சத்திரம், பழனி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை, மடத்துக்குளம் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளை பிரித்து பழனியை தலைமை இடமாக வைத்து புதிய மாவட்டம் உருவாக்க அமைச்சர் சக்கரபாணி மற்றும் திமுக எம்எல்ஏக்கள் முதல்வர் ஸ்டாலினிடம் வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகின்றது.

இது தொடர்பாக முதல்வரை சந்தித்த திமுக நிர்வாகிகள் பழனியை தனி மாவட்டமாக அறிவித்தால், பழனி மலை, திருமூர்த்தி மலை, ஆனைமலை, கொடைக்கானல் ஆகிய மலைகள் அதற்குள் வரும் பழனி முக்கியமான ஆன்மீக நகரம் என்பதால் இந்துக்களின் ஓட்டுக்களை பெற முடியும் என வலியுறுத்தியதாக உடுமலை பகுதியில் உள்ள சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

பழனி மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம் தொகுதியில் இணைப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பல்வேறு தரப்பினரும் ஒன்றிணைந்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தவும் முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...