பல்லடத்தில் ரூ.50 கோடியை மோசடி செய்த நபரின் வீட்டை முற்றுகையிட்டு பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம்!

பல்லடம் அடுத்த வேலப்பகவுண்டம்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவர் மில்லில் பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக கூறி சுமார் 15 மேற்பட்டோரிடம் ரூ.50கோடி மதிப்பிலான நிலங்களை பெற்று மோசடி செய்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் சிவக்குமாரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: பல்லடம் அருகே ரூ.50 கோடி மோசடி செய்த நபரின் வீட்டை முற்றுகையிட்டு பாதிக்கப்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த வேலப்பகவுண்டன்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார். இவர் நூல் மில்லில் பங்குதாரராக சேர்த்து கொள்வதாக கூறி கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி, ரத்தினசாமி, குமரேசன், பிரியா, உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோரின் ரூ.50 கோடி மதிப்பிலான நிலங்களை பெற்று மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இந்த மோசடி வழக்கில் சிவகுமாருக்கு துணையாக இருந்த விஜயகுமார், ராகுல் பாலாஜி, பிரவீனா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தங்களுக்கு சேர வேண்டிய பணத்தையும் பெற்று தர வேண்டும் என்றும், பல்லடம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில், சிவக்குமார் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஒரு மாதம் ஆன நிலையில், இன்று வரை சிவக்குமாரை கைது செய்யாமல் காவல்துறையினர் மெத்தனம் காட்டுவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.



இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் உடுமலை சாலையில் உள்ள சிவக்குமாரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



20க்கும் மேற்பட்டோர் போலீசாரின் துணையோடு விஜயகுமார் என்பவரின் வீட்டில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.



அப்போது, காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.



அப்போது, தங்களது சொத்துக்களை இழந்து கடந்த மூன்று வருடங்களாக அலைந்து வருவதாகவும், கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும், எங்களது சொத்துக்களை மீட்டுத் தருமாறு காவல்துறையினரிடம் பாதிக்கப்பட்ட பெண்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்.

சிவக்குமாரின் கூட்டாளிகளை நம்பி ஏமாந்ததால் தற்போது வீடு ஏலத்திற்கு வந்து ஜப்தி நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதாகவும், தங்களது பணத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பாதிக்கப்பட்டவர்கள் போலீசாரிடம் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....