பல்லடத்தில் ஊராட்சி ஒன்றிய கூட்டம் - கருப்பு சட்டை அணிந்து பங்கேற்ற உறுப்பினர்!

பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆன்லைன் ரம்மி மசோதாவை ரத்து செய்யாத தமிழக ஆளுநருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ஐந்தாவது ஒன்றிய குழு உறுப்பினர் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றார்.



திருப்பூர்: பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஐந்தாவது ஒன்றிய குழு உறுப்பினர் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றார்.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.



பல்லடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 13 வார்டு கவுன்சிலர்களில், ஆறு கவுன்சிலர்கள் மட்டுமே இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.



அரசு அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொள்ளாததால் கூட்ட அரங்கமே வெறிச்சோடி காணப்பட்டது.



இந்நிலையில் ஆன்லைன் ரம்மியை தடை செய்வது குறித்து தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாவை தமிழக ஆளுநர் இரண்டாவது முறையாக நிராகரித்தற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், பல்லடம் ஐந்தாவது ஒன்றிய குழு உறுப்பினர் கருப்பு சட்டை அணிந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.



பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் உயிரை பலி வாங்கும் ஆன்லைன் ரம்மிக்கு தமிழக அரசு மற்றும் அனைத்து அரசியல் கட்சியினரும் ஒருமனதாக சட்டசபையில் சட்ட மசோதா நிறைவேற்றினாலும், தமிழக ஆளுநர் அதை நிராகரித்து வருவதை கண்டிக்கும் வகையில் இன்று கருப்பு சட்டை அணிந்து கூட்டத்தில் பங்கேற்று உள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...