பல்லடத்தில் ஊராட்சி ஒன்றிய கூட்டம் - கருப்பு சட்டை அணிந்து பங்கேற்ற உறுப்பினர்!

பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆன்லைன் ரம்மி மசோதாவை ரத்து செய்யாத தமிழக ஆளுநருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ஐந்தாவது ஒன்றிய குழு உறுப்பினர் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றார்.



திருப்பூர்: பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஐந்தாவது ஒன்றிய குழு உறுப்பினர் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றார்.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.



பல்லடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 13 வார்டு கவுன்சிலர்களில், ஆறு கவுன்சிலர்கள் மட்டுமே இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.



அரசு அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொள்ளாததால் கூட்ட அரங்கமே வெறிச்சோடி காணப்பட்டது.



இந்நிலையில் ஆன்லைன் ரம்மியை தடை செய்வது குறித்து தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாவை தமிழக ஆளுநர் இரண்டாவது முறையாக நிராகரித்தற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், பல்லடம் ஐந்தாவது ஒன்றிய குழு உறுப்பினர் கருப்பு சட்டை அணிந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.



பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் உயிரை பலி வாங்கும் ஆன்லைன் ரம்மிக்கு தமிழக அரசு மற்றும் அனைத்து அரசியல் கட்சியினரும் ஒருமனதாக சட்டசபையில் சட்ட மசோதா நிறைவேற்றினாலும், தமிழக ஆளுநர் அதை நிராகரித்து வருவதை கண்டிக்கும் வகையில் இன்று கருப்பு சட்டை அணிந்து கூட்டத்தில் பங்கேற்று உள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...