ஊட்டி வர்க்கிக்கு புவிசார் குறியீடு - வர்க்கி உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தயாரிக்கப்படும் திண்பண்டங்களில் ஒன்றான ஊட்டி வர்க்கிக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது. மேலும், தமிழகத்தின் பாரம்பரியமான உணவுப் பொருட்களான மணப்பாறை முறுக்கு ஆகியவற்றுடன் மானாமதுரை கடம், மயிலாடி கல்சிற்பங்கள் ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.


நீலகிரி: தமிழகத்தின் பாரம்பரியமான உணவுப் பொருட்களான ஊட்டி வர்க்கி, மணப்பாறை முறுக்கு ஆகியவற்றுடன் மானாமதுரை கடம், மயிலாடி கல்சிற்பங்கள் ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. பல கட்ட ஆய்வுக்குப் பின், கடந்த நவ.,30 புவிசார் குறியீடு இதழில், ஊட்டி வர்க்கிக்கு, புவிசார் குறியீடுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிக்கை வெளியானதிலிருந்து, நான்கு மாதங்களுக்குள் அதாவது மார்ச் 30க்குள் இதற்கு ஆட்சபேம் எழுந்தால், அந்த விண்ணப்பம் மறுபரிசீலனைக்கு உள்ளாகும். இல்லாவிடில், அந்தப் பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு விடும். அந்த வகையில், வரும் மார்ச் 31 லிருந்து, ஊட்டி வர்க்கிக்கு புவிசார் குறியீடு என்கிற மகத்தான அங்கீகாரம் கிடைக்கவுள்ளது.

புவிசார் குறியீடு, ஊட்டி வர்க்கிக்குக் கிடைப்பது, ஊட்டியின் பாரம்பரியத்துக்குக் கிடைத்த சர்வதேச அங்கீகாரமாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் ஊட்டியைத் தவிர, வேறு எங்கு தயாரிக்கப்படும் வர்க்கியையும் ஊட்டி வர்க்கி என்ற பெயரில் விற்பனை செய்வதை, சட்டப்பூர்வமாகத் தடுக்க முடியும்.

இதற்காக பெருமுயற்சி எடுத்த வர்க்கி உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் முகம்மது பரூக் கூறுகையில், ''ஊட்டி வர்க்கிக்குக் கிடைக்கும் இந்த அங்கீகாரம், பெருமகிழ்ச்சியைத் தருகிறது. இதைத் தரமாகத் தயாரிக்க வேண்டுமென்ற பொறுப்புணர்வை இந்த அங்கீகாரம் கொடுத்துள்ளது. ஏற்கனவே, குறியீடு பெற்றுள்ள ஊட்டி டீயுடன் வர்க்கியும் சேர்வது, இணையற்ற சுவையாக அமையவுள்ளது,'' என்றார்.

மொறுமொறு மணப்பாறை முறுக்கு, ஊட்டி வர்க்கியுடன் சேர்த்து, அதே நாளில் மணப்பாறை முறுக்குக்கும் புவிசார் குறியீடு கிடைக்கவுள்ளது. இது, தமிழகத்தின் பாரம்பரிய உணவுப் பொருளுக்கான பெருமையை உலகறியச் செய்யும்.

இவற்றுடன் மண் பாண்டத்துக்குப் பெயர்பெற்ற மானாமதுரையில் தயாரிக்கப்படும் இசைக்கருவியான கடம், குமரி மாவட்டத்தில் தயாராகும் கைவினைப் பொருளாகிய மயிலாடி கல் சிற்பங்கள் ஆகியவற்றுக்கும் அதே நாளில் புவிசார் குறியீடு என்ற பெருமை கிடைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...