ஜீவசாந்தி அறக்கட்டளை சார்பில் அணையா அடுப்பு - கோவை கரும்புக்கடை பகுதியில் திறப்பு

ஆதரவற்ற ஏழை மக்களின் பசியை போக்கும் விதமாக ஜீவ சாந்தி அறக்கட்டளை சார்பில் கோவையில் அணையா அடுப்பு எனும் சமுதாய சமையற்கூடத்தை தமிழ்ழாடு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரஃபி திறந்து வைத்தார்.



கோவை: கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜீவசாந்தி அறக்கட்டளையினர் ஆதரவில்லாமல் உயிரிழந்த உடல்களை அடக்கம் செய்வது, இலவச ஆம்புலன்ஸ் சேவை என பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகின்றனர்.

குறிப்பாக, கொரோனா கால நேரங்களில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் சேவை பணியை செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.

இந்நிலையில், தற்போது மேலும் சேவைப்பணியில் ஈடுபடும் விதமாக அணையா அடுப்பு சமுதாய சமையற்கூடத்தை துவக்கி உள்ளனர்.



ஆதரவற்ற ஏழை எளிய மக்களின் பசியை போக்கும் விதமாக கரும்புகடை சேரன் நகர் பகுதியில் துவக்கியுள்ள இதற்கான துவக்க விழா ஜீவசாந்தி அறக்கட்டளையின் தலைவர் சலீம் தலைமையில் நடைபெற்றது.



இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரஃபி, பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தின் நிறுவனர் குருஜி சிவாத்மா, சி.எஸ்.ஐ.ஆயர் சார்லஸ் சாம்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு அணையா அடுப்பு சமையற்கூடத்தை திறந்து வைத்தனர்.



இந்நிகழ்ச்சியில் ஜீவசாந்தி அறக்கட்டளையின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...