கோவையில் நாய்கள் இனப்பெருக்க மையத்தில் தீவிபத்து - 10க்கும் மேற்பட்ட நாய்கள் பலி

கோவை வடவள்ளியில் பாபு என்பவர் உரிய அனுமதி மற்றும் பாதுகாப்பின்றி நாய்கள் இனப்பெருக்க மையத்தை நடத்தி வந்ததாகவும், தீ விபத்து ஏற்பட்டபோது அங்கு யாரும் இல்லாததால் சுமார் பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் உயிரிழந்து விட்டதாகவும், பாபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை வடவள்ளி அடுத்த வீரகேரளம், சிவகாமி நகர் பகுதியில் செயல்பட்டு வந்த நாய்கள் இனப்பெருக்கு மையத்தில் மாலை திடிரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு யாரும் இல்லாததால் கூண்டில் இருந்து வெளியே வர முடியாமல் சுமார் பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் உள்ளேயே சிக்கி தீயில் கருகி உயிரிழந்தன.



வனவிலங்கு நல ஆர்வலர்களுக்கு கிடைத்த தகவல் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவர்கள் அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒரே ஒரு நாயை மட்டும் மீட்டு அதற்கு சிகிச்சை அளித்தனர்.

இந்த விபத்து தொடர்பாக தேசிய விலங்குகள் நல வாரிய பிரதிநிதியான பிரதீப் பிரபாகரன் என்பவர் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்துள்ளார்.



அதில் பாபு என்பவர் உரிய அனுமதி மற்றும் பாதுகாப்பின்றி நாய்கள் இனப்பெருக்க மையத்தை நடத்தி வந்ததாகவும், தீ விபத்து ஏற்பட்டபோது அங்கு யாரும் இல்லாததால் சுமார் பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் உயிரிழந்து விட்டதாகவும், எனவே அலட்சியமாகவும் அஜாக்கிரதையாகவும் செயல்பட்ட பாபு என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் தெரிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து, நாய்கள் இனப்பெருக்க மைய உரிமையாளர் பாபு என்பவரை தேடி வருகின்றனர். நாய்கள் இனப்பெருக்க மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வெளியேற முடியாமல் பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் கூண்டிலேயே கருகி உயிரிழந்த சம்பவம் விலங்கு ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...