கோவையில் குடும்பத்தகராறில் மகன் மாயம் - தந்தை காவல் நிலையத்தில் புகார்

கோவை துடியலூரை அடுத்த என்.ஜி.ஜி.ஓ.காலனியை சேர்ந்த கண்ணன் என்பவரை காணவில்லை என, அவரது தந்தை வடிவேல் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.


கோவை: கோவை துடியலூரை அடுத்த என்.ஜி.ஜி.ஓ. காலனி பகுதியில் குடியிருந்து வருபவர் வடிவேல், இவரது 48 வயது மகன் கண்ணன், தங்க நகை வேலை செய்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

மேலும், கண்ணன் குடிக்கு அடிமையானவர் என தெரிகிறது. இதன் காரணமாக இவரது தந்தைக்கும் இவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கண்ணன் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தபோது இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

அப்போது கோவித்துக் கொண்டு வீட்டை விட்டுச் சென்ற கண்ணன், வீடு திரும்பவில்லை என தெரிகிறது. இதையடுத்து அக்கம், பக்கம் மற்றும் நண்பர்கள், உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்காததால், அவரது தந்தை வடிவேல் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்கு பதிவுசெய்த போலீசார் காணாமல் போன கண்ணனை தேடி வருகின்றனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...