பயம், பதட்டமின்றி நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்..! - கோவை எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வாழ்த்து

கோவை உட்பட தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள் என்று கோவை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


கோவை: பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் உறுப்பினர் வானதி சீனிவாசன் வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு இன்று 12-ம் வகுப்பு பொது தேர்வு தொடங்குகிறது. தேர்வு எழுதும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது, மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமான காலகட்டம். இந்த பொதுத் தேர்வு, தனிப்பட்ட மாணவரின் எதிர்கால மட்டுமல்ல, நாட்டின் எதிர்காலமும் கூட. இது நவீன தொழில்நுட்ப யுகம்.

ஒவ்வொரு மாணவரிடமும் புதைந்து கிடக்கும் திறனுக்கேற்ப படிப்புகளும், வேலை வாய்ப்புகளும் கொட்டிக் கிடக்கின்றன. எனவே, பயம், பதட்டமின்றி தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள். 12-ம் வகுப்பு தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் நல்ல வளமான எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன். இவ்வாறு வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....