கோவையில் ஆடி அறிமுகப்படுத்தும் டீசல் கார் ஆல்நியு ஆடிஏ4, ஆடி ஏ4 35டிடிஐ

ஜெர்மன் சொகு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி, மாபெரும் வெற்றிகண்ட ஏ4 ஆடியை தொடர்ந்து தற்போது புதிய டீசல் வகையை அறிமுகப்படுத்தியுள்ளது.



இந்த புதிய ஆடி வகை காரின் அறிமுக விழா இன்று கோவையில் நடைபெற்றது. இதில், ஆடி இன்டியா தலைவர் ராகில் அன்சாரி பேசுகையில், வெற்றிகரமாக விற்பனையாகும் சிறந்த மாடலை உருவாக்குவது எளிதான வேலை அல்ல. தயாரிப்பின் ஒவ்வொரு நிலையும் மிகவும் பரவசமானது. ஆடிஏ4 35டிடிஐ மேலும் ஒரு உயர்நிலையை எட்டியுள்ளது. ஈடு இணையற்ற தொழில்நுட்பம், முந்தைய ஏ4 ஆடியை காட்டிலும், மறு வடிவமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் தீவிர வரவேற்பை பெற்றுள்ளது.

செயல் திறன், ஓட்டுதற்கு உற்சாகம், உயர்தொழில்நுட்ப தகவல் பொழுதுபோக்கு அம்சம் போன்றவை இந்த பிரிவில் மேலும் ஒரு உயர்வை அளிக்கிறது.

இந்த புதிய வகை ஆடி காரில் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் இன்ஜின், மேம்படுத்தப்பட்ட எரிதிறன் செயல்பாட்டு முறையால் எரிபொருள் சிக்கனத்தில் புதிய நிர்ணயம் கிடைத்துள்ளது.



மறுவடிவமைக்கப்பட்ட 7 ஸ்பீட் எஸ்ட்ரானிக் டிரான்ஸ்மிஷன், இன்போடைன்மென்ட் மேம்படுத்தப்பட்ட செயல் திறன் , அதிகபட்ச சக்தி தரும் 190 எச்பி இன்ஜினாக மாற்றியுள்ளது" என்றார்.

2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் இன்ஜின் அதிகபட்ச திறனாக 1ஜிஎச்பி, பலவகை உலோக கலவையால் முந்தைய வாகனங்களை விட 120 கிலோ இலகு எடை, எரிபொருளை சிக்கனப்படுத்த எஸ்-ட்ரானிக் டிரான்ஸ்மிஷனுக்கான 7 நிலை வேக கட்டுப்பாடு, சக்தியிலும் எரிபொருள் சிக்கனத்திலும் 7 சதவிகிதம் அதிகரிப்பு, விர்ச்சுவல் காக்பிட், ஸ்மார்ட் போன் இன்டர்பேஸ், புதிய எம்எம்ஐ டிஸ்ப்ளே உள்ளிட்டவை இதன் சிறப்பம்சமாகும்.

இதன் கோவை மாவட்டத்தில் எக்ஸ் ஷோரும் விலையாக ரூ.41 லட்சத்து 16 ஆயிரம் நிர்னயிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...