பில்லூர் 3ம் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை நேரில் ஆய்வு செய்தார் கோவை ஆட்சியர்!

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் கோவை மாநகராட்சியின் புதியதாக இணைக்கப்பட்ட பகுதிகள் உள்ளடக்கிய ரூ.740 கோடி மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்தி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: பில்லூர் மூன்றாம் கூட்டு குடிநீர் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் கோவை மாநகராட்சியின் புதியதாக இணைக்கப்பட்ட பகுதிகள் உள்ளடக்கிய ரூ. 740 கோடி மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்தி திட்டப் (பவானி ஆற்றினை நீராதாரமாகக் கொண்ட பில்லூர் III பணிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் செந்தில் குமார், மேற்பார்வை பொறியாளர் ராஜி, நிர்வாக பொறியாளர் செல்லமுத்து, உதவி நிர்வாக பொறியாளர்கள் செந்தில்குமார், பட்டன், ராதா ஆகியோர் உடனிருந்தனர்.

கோயம்புத்தூர் மாநகராட்சியுடன், குறிச்சி குனியமுத்தூர் மற்றும் கவுண்டம்பாளையம் ஆகிய நகராட்சி பகுதிகளும் 7 பேரூராட்சிகளும், ஒரு ஊராட்சியும் இணைக்கப்பட்டு மாநகராட்சி விரிவு செய்யப்பட்டது. இவ்வாறு விரிவு செய்யப்பட்ட பகுதிகளுக்குத் தேவையான குடிநீரை வழங்கும் பொருட்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் பில்லூர் 3ம் குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டு 740 கோடி செலவில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.



இத்திட்டப் பணிகளானது நீரேற்று நிலையம் குழாய் அமைக்கும் பணிகள், சுத்திகரிப்பு நிலையம், சுரங்கப்பாதை அமைத்தல் என 3 பிரிவுகளாக பிரித்து, பணிகள் நடைபெற்று வருகின்றன.

இத்திட்டத்தின்படி மாநகராட்சிக்கு உட்பட்ட மக்களுக்கு நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 135 லிட்டர் வீதம் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் இயல்பு நீருந்து குழாய், சுத்த நீருந்து குழாய் மற்றும் கிளை பிரதான நீருந்து குழாய் என மொத்தம் 90.76 கி.மீ நீளத்திற்கு அமைக்க உத்தேசித்து, 41.கி.மீ நீளத்திற்கு பணிகள் முடிவுற்றுள்ளது எனவும், மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றது எனவும், குழாய்கள் அமைக்கும் பணிகள் 47% சதவிகிதம் முடிவுற்றுள்ளது எனவும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுரங்கபாதை வடிவமைப்பு மற்றும் கட்டுமான பணிகள் முடிவுற்றுள்ளது. குழாய்கள் அமைக்கவும், பிரதான தரைமட்ட தொட்டி அமைக்கவும் 156 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது எனவும் இதில் 35.50 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலமாகவும், 121 ஏக்கர் நிலம் தனியாருக்குச் சொந்தமானது எனவும் நில கையெடுப்பு பணிகள் அனைத்தும் முடித்து மே மாதத்திற்குள் இத்திட்டம் பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...