எங்களையும் புடிச்சி உள்ளே போடுங்க ஏட்டய்யா..! - வால்பாறை காவல் நிலையத்திற்குள் புகுந்த காட்டு யானைகளால் பரபரப்பு

வால்பாறை காவல் நிலையத்திற்குள் நுழைந்த 8 காட்டு யானைகளை, போலீசார் சத்தமிட்டு விரட்டியதால் தேயிலை தோட்டம் வழியாக மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றன. யானைகள் காவல் நிலையத்திற்கு நுழைந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே தமிழக கேரளா எல்லையில் அமைந்து உள்ள மலுக்கைபாறை எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலையில் நின்று அதிரப்பள்ளி பகுதிக்கு செல்லும் வாகனங்களை வழிமறித்து இடையூறு செய்வது அடிக்கடி அரங்கேறிவருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.



இந்த நிலையில், நேற்று இரவு சுமார் 12 மணி அளவில் மலுக்கைபாறை எஸ்டேட் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த எட்டு காட்டு யானைகள் வால்பாறை சாலையில் நடந்து வந்துள்ளது.



அப்பொழுது காவல் நிலையம் மற்றும் குடியிருப்பு பகுதியில் யானைகள் வரும்பொழுது எதிரே வாகனம் வந்ததால் காட்டு யானைகள் காவல் நிலையத்திற்குள் நுழைந்தது.



சிறிது நேரம் காவல் நிலையத்தில் சுற்றிய யானைக் கூட்டத்தை, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் சத்தம் போட்டதால், தேயிலைத்தோட்டம் வழியாக மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றன.



காவல் நிலையத்திற்கு நள்ளிரவில் திடீரென யானைக் கூட்டம் நுழைந்த சம்பவம் வால்பாறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யானைகள் காவல் நிலையத்திற்கு நுழைந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அடிக்கடி வனப்பகுதியிலிருந்து காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகள் நுழைவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...