பல்லடம் அருகே மது அருந்தியவரிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்ட மூவர் கைது!

பல்லடம் அருகே வெட்டுப்பட்டான் குட்டை பகுதியில் டாஸ்மாக் கடை அருகில் அமர்ந்து மது அருந்திய நபரை மிரட்டி, 3 சவரன் நகை மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்து சென்ற மூவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மது அருந்தி கொண்டிருந்தவரிடம் நகைகளை பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பல்லடம் அருகேயுள்ள சேடபாளையம் அடுத்த குமரன் கார்டனில் வசித்து வருபவர் அசோக் குமார். இவர் நேற்று பிற்பகல் வெட்டுப்பட்டான் குட்டை என்ற இடத்தில் அரசு மதுபான கடைக்கு அருகில் அமர்ந்து மது அருந்தியுள்ளார்.

அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் மதுபோதையில் இருந்த அசோக்குமாரை மிரட்டி அவர், அணிந்திருந்த மூன்று சவரன் செயின் மற்றும் அவரது இருசக்கர வாகனத்தை திருடி சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து அசோக்குமார், பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மூவரையும் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், இன்று காலை மூவரையும் பிடித்து கைது செய்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.



தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அம்மா பாளையத்தை சேர்ந்த தாமரை சந்திரன் (19), திண்டுக்கல் மாவட்டம் தருமத்துபட்டியை சேர்ந்த பிரவீன் குமார் (26) மற்றும் அருள் புறத்தைச் சேர்ந்த ராகுல் (20) ஆகியோர் என்பது தெரியவந்தது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...