நாக்பூரில் குடிநீர் திட்ட கருத்தரங்கு - கோவை மாநகராட்சி குடிநீர் திட்டத்தை பாராட்டி நினைவுப்பரிசு!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை சார்பில் 24 மணி நேர குடிநீர் திட்டம் குறித்த கருத்தரங்கில், கோவை மாநகர குடிநீர் திட்டத்தின் நவீன செயல்முறைகளை பாராட்டி, நினைவு பரிசு வழங்கப்பட்டது.


கோவை: நாக்பூரில் நடைபெற்ற மத்திய அரசின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில், கோவை மாவட்ட குடிநீர் திட்டத்தை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின்‌ வீட்டு வசதி மற்றும்‌ நகர்ப்புற விவகாரங்கள்‌ துறையின்‌ சார்பில்‌ வட இந்தியாவின்‌ 10 மாநிலங்களுக்கான மண்டலத்திற்கான 24 மணி நேர குடிநீர்‌ திட்டங்கள்‌ குறித்த கருத்தரங்கு மஹாராஷ்டிரா மாநிலம்‌ நாக்பூரில்‌ நடைபெற்றது.

கடந்த பிப்ரவரி 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில்‌ நடைபெற்ற இந்த கருத்தரங்கில்‌, கோவை மாநகராட்சியின்‌ 24 மணி நேர குடிநீர்‌ திட்டம்‌ குறித்த பல நவீன செயல்முறைகளை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது.

இந்த நினைவு பரிசை, திட்ட மேலாண்மை ஆலோசனை குழு தலைவர்‌ கோபாலகிருஷ்ணன்‌, சூயஸ்‌ நிறுவன திட்ட மேலாளர்‌ சங்கராம்‌ பட்நாயக் மற்றும் புவியியல்‌ நிபுணர்‌ சத்யநலம்‌ ஆகியோர் மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்பிடம் வழங்கினர்.

கோவை மாநகராட்சியின் பிரதான அலுவலக கூட்டரங்கில், மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப் தலைமையில் நடைபெற்ற‌ நுகர்வோர்‌ அமைப்புகளுடனான ஆலோசனைக்‌ கூட்டத்தின் போது, நினைவு பரிசினை வழங்கினர்.



இந்த நிகழ்வின் போது, மாநகர பொறியாளர்‌ இளங்கோவன்‌ மற்றும்‌ மாநகராட்சி உயர்‌ அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...