ஊட்டி தாவரவியல் பூங்காவில் துலிப் மலர்களை ஆர்வமுடன் கண்டு ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்!

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் முதல் முறையாக வளர்க்கப்பட்டு, கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள துலிப் மலர் உள்ளிட்ட, 50 வகையான வண்ண மலர்களைச் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.



நீலகிரி: உதகை தாவர பூங்காவில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ள துலிப் மலர்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.



நீலகிரி மாவட்டம் உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பிரசித்தி பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவைக் காண அதிக ஆர்வம் காட்டுவது வழக்கம்.



ஆனால் தற்போது குளிர்காலம் என்பதால் பூங்கா மலர்கள் இன்றி பொலிவிழந்து காணப்படுவதால், சுற்றுலாப் பயணிகள் பூங்காவை மட்டுமே சுற்றிப் பார்த்து ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.



இதனையடுத்து சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசிக்க பூங்காவிற்குள் உள்ள பழமையான கண்ணாடி மாளிகையில் சிறப்பு ஏற்பாடுகளைப் பூங்கா நிர்வாகம் செய்துள்ளது.



அதாவது கண்ணாடி மாளிகைக்குள் பனியின் தாக்கம் இருக்காது என்பதாலும், குளிரிலும் பூக்கள் பாதிக்காத வகையில், 50 வகையான மலர் செடிகள் கொண்ட 25 ஆயிரம் தொட்டிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.



அதில் வழக்கமான ரகங்களான பெட்டூனியா, காகித பூ, ஐட்ரிஜினியா, பால்சம், பிக்கோனியா, டெய்சி எனப் பல வண்ணங்களில் மலர் தொட்டிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.



அதில் ஜம்மு காஷ்மீர் போன்ற பனிப் பிரதேசங்களிலும் மட்டுமே பூக்க கூடிய துலிப் மலர்ச் செடிகள் தாவரவியல் பூங்கா பண்ணையில் முதல் முறையாக பயிரிட்டு வெற்றி கரமாக வளர்க்கப்பட்டு பூக்கள் பூத்துள்ளதையடுத்து 4 வித துலிப் மலர் தொட்டிகளும் இடம் பெற்றுள்ளன.



சிவப்பு, மஞ்சள், வெள்ளை, பிங்க் என பூத்துள்ள துலீப் மலர்களைச் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...