திருப்பூரில் பீகார் தொழிலாளி வெட்டிக்கொலை - ஜார்கண்ட் தொழிலாளிக்கு போலீஸ் வலை!

திருப்பூர் அருகே தனது மனைவியுடன் தொடர்பில் இருந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த பனியன் தொழிலாளி பவன் யாதவ்-யை, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த உபேந்தரதாரி என்பவர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: பீகார் மாநிலத்தை சேர்ந்த பவன் யாதவ், திருப்பூர் நெசவாளர் காலனி பகுதியில் குடும்பத்துடன் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதேபோல் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த உபேந்தரதாரி, திருப்பூர் நெசவாளர் காலனி பகுதியில் குடும்பத்துடன் தங்கி, டிரைவராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், உபேந்தரதாரி மனைவி சித்ராதேவியுடன் பவன் யாதவிற்கு தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு பவன் யாதவ் வீட்டிற்கு சென்ற உபேந்தரதாரி, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.



ஒரு கட்டத்தில் ஆத்திரடைந்த உபேந்தரதாரி தான் கையில் வைத்திருந்த அரிவாளால் பவன் யாதவை தலை, கை என சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

இதில் பலத்த இரத்த காயமடைந்த பவன் யாதவை, அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பவன்யாதவ் இன்று காலை உயிரிழந்தார்.



இது குறித்து வழக்குபதிவு செய்த திருப்பூர் வடக்கு போலீசார், தப்பி சென்ற ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த உபேந்தரதாரியை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...