கோவை கணபதி காமராஜபுரத்தில் புதிய ரேசன் கடை கட்டிடம் திறப்பு - எம்பி பி.ஆர்.நடராஜன் பங்கேற்பு

எம்பி பி.ஆர்.நடராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கோவை கணபதி காமராஜபுரத்தில் கட்டப்பட்ட புதிய ரேசன் கடை இன்று திறக்கப்பட்டது. பல்லாண்டு கோரிக்கை நிறைவேறியதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


கோவை:கோவை கணபதி காமராஜபுரம் பகுதியில் ரூ.25லட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ரேசன் கடை கட்டிடத்தை பி.ஆர்.நடராஜன் திறந்து வைத்தார்.

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கணபதி காமராஜபுரம் பகுதியில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் புதிய ரேசன் கடைக்கான கட்டிடம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதனையேற்று, பி.ஆர்.நடராஜன் எம்பி., புதிய ரேசன் கடைக்கான கட்டிடம் கட்ட ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் துவங்கப்பட்டது.

இதற்கான கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், ரேசன் கடைக்கான புதிய கட்டிடத்தை இன்று மார்க்சிஸ்ட் கட்சியின் கோவைநாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், கோவை மாநகராட்சி மத்திய மண்டல துணை ஆணையாளர் மகேஸ் கண்ணன், உதவிப் பொறியாளர் சரவணகுமார், 31ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் வைரமுருகன், 12ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன், வடக்கு நகரச்செயலாளர் சுந்தரம் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி, திமுக பிரமுகர்களும், பொதுமக்களும் திரளானோர் பங்கேற்றனர்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 32.95 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 8ஆம் தேதி நிலவரப்படி 45.8 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: தொடர் நீர் வெளியேற்றம்

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஆழி...

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...