திருடப்பட்ட ரூ.12.50 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்பு - உரிமையாளர்களிடம் ஒப்படைத்த நீலகிரி எஸ்.பி.!

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் திருடப்பட்ட 12.50 லட்சம் மதிப்பிலான 152 செல்போன்கள் மீட்கப்பட்டு, உரிமையாளர்களிடம் இன்று வழங்கப்பட்டன. ஆன்லைன் மோசடி மூலம் ஏமாற்றபட்ட 3 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டு பாதிக்கபட்டவரிடம் எஸ்பி பிரபாகர் வழங்கினார்.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் ஆன்லைன் மோசடி மற்றும் சமூக வலை தள குற்றங்கள் தொடர்பாக 679 புகார்கள் வந்தன. அவற்றில் 67 புகார்களில் வழக்குகள் பதிவு செய்தூள்ள மாவட்ட சைபர் காவல் துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.



அதில், 181 செல்போன்கள் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடமிருந்து கொள்ளை அடித்து செல்லப்பட்டது. அவற்றில் 152 செல்போன்களை மீட்டுள்ள நீலகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார், இன்று மாவட்ட காவல் கண்காணிப்பளர் முன்னிலையில் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கபட்டது.



அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் பிரபாகர், நீலகிரி மாவட்டத்தில் சைபர் குற்றங்கள் மூலமாக இதுவரை 6 கோடியே 16 லட்சம் மோசடி நடைபெற்றுள்ளது. அதில், 10 லட்சம் மீட்கபட்டு பாதிக்கபட்டவர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளது. 4 கோடியே 40 லட்சம் ரூபாயை வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.



மேலும், தற்போது 12.50 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன.



52 செல்போன்கள் மீட்கும் பணி தொடர்கிறது, ஆன்லைன் மோசடி மூலம் ஏமாற்றபட்ட 3 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டு பாதிக்கபட்டவரிடம் ஒப்படைக்கபட்டுள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...