திருடப்பட்ட ரூ.12.50 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்பு - உரிமையாளர்களிடம் ஒப்படைத்த நீலகிரி எஸ்.பி.!

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் திருடப்பட்ட 12.50 லட்சம் மதிப்பிலான 152 செல்போன்கள் மீட்கப்பட்டு, உரிமையாளர்களிடம் இன்று வழங்கப்பட்டன. ஆன்லைன் மோசடி மூலம் ஏமாற்றபட்ட 3 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டு பாதிக்கபட்டவரிடம் எஸ்பி பிரபாகர் வழங்கினார்.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் ஆன்லைன் மோசடி மற்றும் சமூக வலை தள குற்றங்கள் தொடர்பாக 679 புகார்கள் வந்தன. அவற்றில் 67 புகார்களில் வழக்குகள் பதிவு செய்தூள்ள மாவட்ட சைபர் காவல் துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.



அதில், 181 செல்போன்கள் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடமிருந்து கொள்ளை அடித்து செல்லப்பட்டது. அவற்றில் 152 செல்போன்களை மீட்டுள்ள நீலகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார், இன்று மாவட்ட காவல் கண்காணிப்பளர் முன்னிலையில் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கபட்டது.



அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் பிரபாகர், நீலகிரி மாவட்டத்தில் சைபர் குற்றங்கள் மூலமாக இதுவரை 6 கோடியே 16 லட்சம் மோசடி நடைபெற்றுள்ளது. அதில், 10 லட்சம் மீட்கபட்டு பாதிக்கபட்டவர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளது. 4 கோடியே 40 லட்சம் ரூபாயை வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.



மேலும், தற்போது 12.50 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன.



52 செல்போன்கள் மீட்கும் பணி தொடர்கிறது, ஆன்லைன் மோசடி மூலம் ஏமாற்றபட்ட 3 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டு பாதிக்கபட்டவரிடம் ஒப்படைக்கபட்டுள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...