கோவை பி.என்.பாளையத்தில் பாஜக செயற்குழு கூட்டம் - தீர்மானங்கள் நிறைவேற்றம்!

பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் காட்டு யானை தாக்கி 3 பேர் காயமடைந்த சம்பவத்திற்குக் கண்டங்களையும், வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாஜக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



கோவை: பெரியநாயக்கன்பாளையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.



கோவை பெரியநாயக்கன்பாளையம் நகர பாஜக செயற்குழு கூட்டம் மண்டலத் தலைவர் மகேந்திரன் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பாஜக ஒன்றியக் கவுன்சிலர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார். இதில் மாவட்டச் செயலாளர் சவுந்தரராஜன், ஒன்றிய பார்வையாளர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநகர் மாவட்ட பொதுச்செயலாளர் பிரீத்தி லட்சுமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.



செயற்குழு கூட்டத்தில், பெரியநாயக்கன் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் காட்டு யானை தாக்கி 3 பேர் காயமடைந்த சம்பவத்திற்குக் கண்டங்களையும், வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அதேபோல் பெரியநாயக்கன் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தடை விதிக்கப்பட்டுள்ள செங்கல் சூளை தொழிலாளர்களுக்கு மாற்று தொழில் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும், பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளில் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு இன்றி நடைபெற்று வருவதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், ஜார்கண்ட் மாநில ஆளுநராக பாஜக மாநில தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை நியமித்த மத்திய அரசிற்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் முருகானந்தம், பாஜக நிர்வாகிகள் கோபிநாத், யோகேஷ், பூபதி, வேணுகோபால் மரகதம் உள்படப் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...