கோவைக்கு குடியரசு தலைவர் வருகை - 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

கோவை ஈஷா மையத்தில் வருகிற 18-ந் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நடைபெறும் மகா சிவராத்திரி விழாவிற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வருகை தரவுள்ளதால் 8,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.


கோவை: ஈஷா மையத்திற்கு குடியரசு தலைவர் வரவுள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காணொலி வாயிலாக தலைமைச் செயலர் இறையன்பு, கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கோவை ஈஷா யோகா மையத்தில் வருகிற 18ஆம் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை மஹா சிவராத்திரி விழா நடக்க இருக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கிறார்.

குடியரசு தலைவர் கோவை வருகையைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் காணொலி மூலம் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. இதில் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி கமிஷனர் பிரதாப், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இவர்களுடன், துறை ரீதியாகச் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் தொடர்பாக, தலைமைச் செயலர் இறையன்பு ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், குடியரசு தலைவருக்கு உரிய அனைத்து வித பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மாநகர போலீசார் மேற்கொள்ள வேண்டும்.

வெடிகுண்டு செயலிழப்பு கருவிகள் தயாராக வைத்திருக்க வேண்டும். விழா நடக்கும் இடத்தில், ஆளுநர்கள், முதல்வர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு விதிமுறைக்கு உட்பட்டு இருக்கை வசதி செய்து கொடுக்கும் பொறுப்பு, டி.ஆர்.ஓ மற்றும் ஆர். டி.ஓ-வுக்கு கொடுக்க வேண்டும்.

சிறப்பு மருத்துவ நிபுணர்களுடன் மருத்துவக் குழு இருக்க வேண்டும். மின் விநியோகத்தில் எவ்வித இடையூறும் இருக்கக் கூடாது. ஜென்ரேட்டர்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். சாலைகளைச் சீரமைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதையடுத்து ஜனாதிபதி வருகையை அடுத்து, கோவை மாநகர மற்றும் மாவட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மாவட்டத்தில் 8 ஆயிரம் போலீசார் மூலம் ஐந்தடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது.

அண்டை மாவட்டங்களிலிருந்து காவலரை வரவழைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் தங்குவோர் குறித்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...