துடிப்புடன் இருந்த இருதயத்தில் குழாய் மாற்று அறுவை சிகிச்சை செய்து ஆசிய அளவில் கேஎம்சிஎச் சாதனை


கோவையைச் சேர்ந்த கேஎம்சிஎச் மருத்துவமனையில் துடித்துக்கொண்டிருந்த இதயத்தில் இருதய வால்வு மாற்று அறுவைசிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. மருத்துவமனைத் தரப்பில் ஆசிய அளவில் இச்சிகிச்சை தற்போதே முதன்முறையாக நடைபெற்றுள்ளது என கூறப்படுகிறது.

இன்று காலை இதுகுறித்து கேஎப்சிஎச் தலைவர் நல்ல ஜி.பழனிச்சாமி பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:-

இந்த அறுவை சிகிச்சை கேஎம்சிஎச் வரலாற்றில் ஒரு முக்கிய மைல் கல்லாகும். அரோட்டிக் வால்வு ஸ்டெனோசிஸ் நோயைக் குணப்படுத்துவதில் இது ஒரு முக்கிய முன்னேற்றமாகும். 

அமெரிக்காவில் இதுவரை 7-8 மனிதர்களுக்கு மட்டுமே இந்த சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. ஆசியாவில் கேஎம்சிஎச் மருத்துவமனை இதில் முன்னோடியாக தற்போது இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளது.

இந்த அறுவை சிகிச்சையின் வெற்றிச்சதவிகிதம் 90 முதல் 95 சதவிகிதம் ஆகும். வயதாகும் போது இருதயத்தில் உள்ள இரத்தக்குழாய்கள் கடிணமாக மாறுகின்றன. இந்த 76 வயது நோயாளி இதற்கு முன்னரே இருதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துள்ளார். எங்கள் மருத்துவமனையில் உள்ள நிபுனர்கள் வெனிபிரி வால்வை பொருத்துவதே இதற்கு சிறப்பான சிகிச்சையாக இருக்கும் என்று பரிந்துரை செய்தனர்.

எங்களுடையே முதல் முயற்சியிலேயே இந்த சிகிச்சை வெற்றிகரமாக அமைந்துள்ளது. தற்போது நோயாளி சிகிச்சை முடிந்த இரண்டு நாட்களிலேயே நடக்கத் துவங்கிவிட்டார்" என தெரிவித்தார்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட இருதய சிகிச்சை நிபுனர் மருத்துவர் தாமஸ் அலெக்ஸ்சான்டர் மற்றும் இருதய சிகிச்சை பிரிவின் இயக்குநர் பிரசாந்த் வைஜனாத் ஆகியோரை நல்ல ஜி.பழனிச்சாமி பத்திரிகையாளர்கள் மத்தியில் அறுமுகம் செய்தார்.

Newsletter

காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் கூட்டணி தலைவர்கள் புகைப்படம்: தெளிவான வழிகாட்டுதல் கோரிக்கை

கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் S.P. சுதன் நாயக் ராஜ், காங்கிரஸ் கட்சியின் சொந்த நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சி...

Coimbatore Police Museum to Offer Free Entry on September 6 for Police Day

The Tamil Nadu Police Museum in Coimbatore will offer free entry to the public and school and college students on Septem...

தாய்லாந்து சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவை சிறுவன் ரக்‌ஷனுக்கு 2-ம் இடம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக ‌...

மோசடி வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் தேவை: கோவையில் VHP பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) சார்பில் நடைபெற்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மிலிந்த் பரந்தே, கோயி...

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...