கோவை மதுக்கரையில் செல்போன் டவரில் தீ விபத்து - பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரை!

கோவை மாவட்டம் மதுக்கரை அருகேயுள்ள ஜியோ செல்போன் டவரில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் பேட்டரி மற்றும் ஓயர்கள் என பல லட்சம் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது.


கோவை: மதுக்கரை அருகே ஜியோ செல்போன் டவரில் ஏற்பட்ட தீ விபத்தில் பேட்டரி, ஒயர்கள் என பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின.

மதுக்கரை அடுத்த அறிவொளிநகர் பகுதியில் ஜியோ செல்போன் டவர் அமைந்துள்ளது. இந்த டவருக்கு கிழ்பகுதியில் உள்ள பேட்டரி யூனிட்டில் திடிரென தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து உள்ளே இருந்த பேட்டரிகளை அகற்றினர்.

மின்கசிவால் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் டவர் உள்ளே இருந்தஒயர்களில் தீ பரவி டவரின் மேல்பகுதியில் இருந்த ஒயரிலும் பிடித்து முழுமையாக எரிந்து நாசமானது. இதில் பல லட்சம் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...