கோவை மதுக்கரையில் செல்போன் டவரில் தீ விபத்து - பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரை!

கோவை மாவட்டம் மதுக்கரை அருகேயுள்ள ஜியோ செல்போன் டவரில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் பேட்டரி மற்றும் ஓயர்கள் என பல லட்சம் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது.


கோவை: மதுக்கரை அருகே ஜியோ செல்போன் டவரில் ஏற்பட்ட தீ விபத்தில் பேட்டரி, ஒயர்கள் என பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின.

மதுக்கரை அடுத்த அறிவொளிநகர் பகுதியில் ஜியோ செல்போன் டவர் அமைந்துள்ளது. இந்த டவருக்கு கிழ்பகுதியில் உள்ள பேட்டரி யூனிட்டில் திடிரென தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து உள்ளே இருந்த பேட்டரிகளை அகற்றினர்.

மின்கசிவால் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் டவர் உள்ளே இருந்தஒயர்களில் தீ பரவி டவரின் மேல்பகுதியில் இருந்த ஒயரிலும் பிடித்து முழுமையாக எரிந்து நாசமானது. இதில் பல லட்சம் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...