கோவை ஆத்துப்பாலம் வழியாகக் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிப்பு

கோவை ஆத்துப்பாலம் வழியாக உக்கடம், கனரக வாகனங்கள் செல்ல முற்றிலும் தடை விதிக்கப்படுவதாக மாநகர போலீசார் அறிவிப்பு.


கோவை: உக்கடம், ஆத்துப்பாலத்தில், மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதால் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை, உக்கடம், ஆத்துப்பாலத்தில், மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதால், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, கோவை மாநகர காவல் போக்குவரத்து பிரிவின் சோதனை முயற்சியாக, கோட்டப் பொறியாளர் சாலை பாதுகாப்பு, மனுநீதி மற்றும் அந்த பிரிவைச் சார்ந்த அலுவலர்களுடன் இணைந்து, இன்று மாலை 4 மணிமுதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி, பாலக்காடு ரோட்டிலிருந்து, ஆத்துப்பாலம் வழியாக, கோவை மாநகருக்குள், உக்கடம் நோக்கி வரும், கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள், முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி, ரோட்டிலிருந்து கோவை மாநகருக்குள், வரும் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர இலகுரக வாகனங்கள், ஆத்துப்பாலத்திலிருந்து உக்கடம் நோக்கி, வலதுபுறம் திரும்பத் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாகன ஓட்டிகள், நேராக சுமார் 500 மீட்டர் தொலைவில் திரும்பி இடதுபுறமாகத் திரும்பி, உக்கடம் நோக்கி, தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம்.

பாலக்காடு சாலை வழியாக, கோவை மாநகருக்குள், வரும் கனரக வாகனங்கள், மற்றும் சரக்கு வாகனங்கள், கோவைப்புதூர் பிரிவில், இடதுபுறமாகத் திரும்பியும் அல்லது சுண்ணாம்பு காளவாய் சந்திப்பு, புட்டுவிக்கி சாலையில் இடதுபுறமாகத் திரும்பி, சுண்டக்காமுத்தூர் சாலை வழியாக, தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம்.

பொள்ளாச்சி சாலையிலிருந்து, கோவை மாநகருக்குள், வரும் கனரக வாகனங்கள், சுந்தராபுரம் சந்திப்பில், வலதுபுறமாகத் திரும்பி, போத்தனூர், நஞ்சுண்டாபுரம், ராமநாதபுரம் ரோடு வழியாக, கோவை மாநகருக்குள் செல்லலாம்.

அதேபோல், கோவையிலிருந்து பொள்ளாச்சிக்கு, செல்லும் இருசக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக வாகன ஓட்டிகள், ஆத்துப்பாலம் வழியாக, வழக்கம்போல், எந்தவித தடையுமின்றி, தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம்.

இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு, பொதுமக்கள் தங்களது ஒத்துழைப்பை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...