கோவை ஆத்துப்பாலம் வழியாகக் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிப்பு

கோவை ஆத்துப்பாலம் வழியாக உக்கடம், கனரக வாகனங்கள் செல்ல முற்றிலும் தடை விதிக்கப்படுவதாக மாநகர போலீசார் அறிவிப்பு.


கோவை: உக்கடம், ஆத்துப்பாலத்தில், மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதால் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை, உக்கடம், ஆத்துப்பாலத்தில், மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதால், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, கோவை மாநகர காவல் போக்குவரத்து பிரிவின் சோதனை முயற்சியாக, கோட்டப் பொறியாளர் சாலை பாதுகாப்பு, மனுநீதி மற்றும் அந்த பிரிவைச் சார்ந்த அலுவலர்களுடன் இணைந்து, இன்று மாலை 4 மணிமுதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி, பாலக்காடு ரோட்டிலிருந்து, ஆத்துப்பாலம் வழியாக, கோவை மாநகருக்குள், உக்கடம் நோக்கி வரும், கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள், முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி, ரோட்டிலிருந்து கோவை மாநகருக்குள், வரும் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர இலகுரக வாகனங்கள், ஆத்துப்பாலத்திலிருந்து உக்கடம் நோக்கி, வலதுபுறம் திரும்பத் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாகன ஓட்டிகள், நேராக சுமார் 500 மீட்டர் தொலைவில் திரும்பி இடதுபுறமாகத் திரும்பி, உக்கடம் நோக்கி, தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம்.

பாலக்காடு சாலை வழியாக, கோவை மாநகருக்குள், வரும் கனரக வாகனங்கள், மற்றும் சரக்கு வாகனங்கள், கோவைப்புதூர் பிரிவில், இடதுபுறமாகத் திரும்பியும் அல்லது சுண்ணாம்பு காளவாய் சந்திப்பு, புட்டுவிக்கி சாலையில் இடதுபுறமாகத் திரும்பி, சுண்டக்காமுத்தூர் சாலை வழியாக, தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம்.

பொள்ளாச்சி சாலையிலிருந்து, கோவை மாநகருக்குள், வரும் கனரக வாகனங்கள், சுந்தராபுரம் சந்திப்பில், வலதுபுறமாகத் திரும்பி, போத்தனூர், நஞ்சுண்டாபுரம், ராமநாதபுரம் ரோடு வழியாக, கோவை மாநகருக்குள் செல்லலாம்.

அதேபோல், கோவையிலிருந்து பொள்ளாச்சிக்கு, செல்லும் இருசக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக வாகன ஓட்டிகள், ஆத்துப்பாலம் வழியாக, வழக்கம்போல், எந்தவித தடையுமின்றி, தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம்.

இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு, பொதுமக்கள் தங்களது ஒத்துழைப்பை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...