கோவை சூலூரில் பெட்டிக்கடையில் அரசு மதுபானம் விற்பனை - லாரி ஓட்டுநர் எடுத்த வீடியோ வைரல்..!

கோவை மாவட்டம் சூலூரில் பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக அரசு மதுபானத்தை விற்பனை செய்துவந்த கடையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த அரசு மதுபானங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.



கோவை மாவட்டம் சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பள்ளபாளையம், பாப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக வீடுகள் மற்றும் பெட்டி கடைகளில் மது விற்பனை நடைபெறுவதாக சமூக வலைதளங்களில் போட்டோக்கள் மற்றும் வாட்ஸ் அப் வீடியோக்கள் பரவிவந்தது.



அதிலும் குறிப்பாக லாரி ஓட்டுநர் ஒருவர், பெட்டி கடையில் மதுபானம் விற்பதாக வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருந்தார். இது வலைதளங்களில் வைரலான நிலையில் போலீசார் தனிப்படை அமைத்து அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.



அப்போது, பாப்பம்பட்டி பகுதியில் பெட்டிக்கடையில் மது விற்பனை செய்து வந்த சுவாமிநாதன் என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் பெட்டிக்கடைக்குள் வைத்து அந்த வழியாக செல்லக்கூடிய வட மாநில நபர்கள் மற்றும் லாரி ஓட்டுனர்களுக்கு மதுபானத்தை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 50 பாட்டில் மதுபானங்களையும் பறிமுதல் செய்தனர்.

Newsletter

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 15...