கோவை சூலூரில் பெட்டிக்கடையில் அரசு மதுபானம் விற்பனை - லாரி ஓட்டுநர் எடுத்த வீடியோ வைரல்..!

கோவை மாவட்டம் சூலூரில் பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக அரசு மதுபானத்தை விற்பனை செய்துவந்த கடையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த அரசு மதுபானங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.



கோவை மாவட்டம் சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பள்ளபாளையம், பாப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக வீடுகள் மற்றும் பெட்டி கடைகளில் மது விற்பனை நடைபெறுவதாக சமூக வலைதளங்களில் போட்டோக்கள் மற்றும் வாட்ஸ் அப் வீடியோக்கள் பரவிவந்தது.



அதிலும் குறிப்பாக லாரி ஓட்டுநர் ஒருவர், பெட்டி கடையில் மதுபானம் விற்பதாக வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருந்தார். இது வலைதளங்களில் வைரலான நிலையில் போலீசார் தனிப்படை அமைத்து அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.



அப்போது, பாப்பம்பட்டி பகுதியில் பெட்டிக்கடையில் மது விற்பனை செய்து வந்த சுவாமிநாதன் என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் பெட்டிக்கடைக்குள் வைத்து அந்த வழியாக செல்லக்கூடிய வட மாநில நபர்கள் மற்றும் லாரி ஓட்டுனர்களுக்கு மதுபானத்தை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 50 பாட்டில் மதுபானங்களையும் பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...