திருப்பூர் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் விரைவில் மின்உற்பத்தி - மாநகராட்சி மேயர் பேச்சு!

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் விரைவில் மின்சாரம் தயாரிக்கப்படும் என கவுன்சிலர்கள் கூட்டத்தில் மேயர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி மற்றும் துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசுகையில், திருப்பூர் மாநகராட்சி சார்பில் நடைபெற்ற பொங்கல் விழா மிகவும் சிறப்பாக நடந்தது. இதற்கு காரணமாக இருந்த மேயர் மற்றும் ஆணையர், அதிகாரிகள் அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம். தமிழகமே திருப்பூரில் நடந்த பொங்கல் திருவிழாவை திரும்பி பார்த்துள்ளது.

மேலும், பதவி உயர்வுபெற்று கலெக்டராக பொறுப்பேற்க உள்ள மாநகராட்சி கமிஷனருக்கு பாராட்டுகள். சென்னை பெருநகர்மன்ற கூட்டத்தில் ம.தி.மு.க. கவுன்சிலர், மாமன்ற கூட்டம் தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்க வேண்டும் என கோரிக்கை வைத்ததன் பேரில், அது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதுபோல் திருப்பூர் மாமன்ற கூட்டம் தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.



தொடர்ந்து பேசிய மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், 4-வது குடிநீர் திட்ட பணிகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும். இந்த திட்டம் பயன்பாட்டிற்கு வந்ததும் மாநகராட்சிப் பகுதியில் குடிநீர் பிரச்சினை இருக்காது. 13 குடிநீர் நீர்தேக்க தொட்டிகளில் மாநகராட்சி வடக்கு பகுதிகளில் முதற்கட்டமாக நீரேற்ற திட்டமிடப்பட்டது. இதில், 3 நீர்தேக்க தொட்டிகளில் நீரேற்றப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பகுதிகளுக்கும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

மாநகராட்சியில் 1-4-2018 அன்று முதல் தனியார் பள்ளிகளுக்கு சொத்து வரி வசூலிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சொத்து வரி செலுத்தாத தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பூ மார்க்கெட் பகுதிகளில் காலியாக உள்ள இடத்தில் தற்காலிக கடைகள் அமைக்கலாம் என பலரும் தெரிவித்தனர்.

ஆனால், அந்த பகுதியில் தற்காலிக கடைகள் அமைக்க அனுமதி கொடுக்க வேண்டும். அதனை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வாகனங்களை நிறுத்த பயன்படுத்தலாம். மாநகராட்சி சார்பில் பல்வேறு பணிகளை திறம்பட செய்து வருகிறோம். இதில், திடக்கழிவு மேலாண்மை மூலம் நுண்ணுயிர் தயாரித்து வருகிறோம். மேலும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மின்சாரம் தயாரிக்கும் பணிகளும் விரைவில் தொடங்கப்படவுள்ளது என்று மேயர் தினேஷ்குமார் தெரிவித்தார்.

Newsletter

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....