பொள்ளாச்சி மயானப் பாதை பிரச்சினை - இறந்தவர் உடலை அடக்கம் செய்ய ஆற்றில் இறங்கி தூக்கிச் செல்லும் அவலம்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மயானத்திற்குச் செல்ல முறையான பாதை இல்லாததால், இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய ஆற்றுத் தண்ணீரில் இறங்கி தூக்கிச் சென்ற அவலம் அரங்கேறியது.



கோவை: பொள்ளாச்சி அடுத்துள்ள கோவிந்தனூர் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், இந்தக் கிராமத்தில் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவர் உடல் நலக்குறைவால் இறந்தார்.

இங்கு இறப்பவர்களின் உடலை அடக்கம் செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள மயானத்திற்கு செல்ல பாதை இல்லாமல் சேறும் சகதியுமாக உள்ள நீரில் இறங்கி ஆபத்தான முறையில் ஆற்றைக் கடந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.



இந்நிலையில், இறந்துபோன ராமசாமியின் உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் சேறும், சகதியும் உள்ள முட்புதர்களால் சூழ்ந்துள்ள ஆற்றைக் கடந்து சடலத்தை தூக்கி சென்று அடக்கம் செய்தனர்.

ஒவ்வொரு முறையும் இறந்தவர்களின் உடலை இப்படித்தான் எடுத்துச் சென்று மயானத்தில் அடக்கம் செய்வதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். மேலும் மழை காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும், இறந்தவர்களின் உடலை ஆற்றில் இறங்கி தூக்கி சென்றுதான் அடக்கம் செய்ய வேண்டிய நிலை இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

இது குறித்து பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம், கோவிந்தனூர் கிராம மக்கள் மயானம் செல்லும் பாதையில் ஆற்றை கடக்க தரைப்பாலம் அமைத்து தரவேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.

இதனிடையே, இறந்தவரின் உடலை நீரில் ஆற்றைக் கடந்து உறவினர்கள் சுமந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

Newsletter

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...