கோவையில் குடியரசு தின கொண்டாட்டம் - அதிகாரிகளுக்கு நன்சான்றிதழ் வழங்கிய ஆட்சியர்!

கோவை உஉசி மைதானத்தில் 74வது குடியரசு தினம் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும், சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகளுக்கு பதக்கங்கள், நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.



கோவை: கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தேசிய கொடியை ஏற்றினார். அதனை தொடர்ந்து நடந்த காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஆட்சியர் ஏற்றுக்கொண்டார்.



பின்னர் காவல் துறை உள்ளிட்ட அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களை ஆட்சியர் சமீரன் வழங்கினார். அதன்படி முதலமைச்சர் காவலர் பதக்கமானது மாநகர காவல் துறையினர் 69 பேருக்கும், மாவட்ட காவல் துறையினர் 43 பேருக்கும் வழங்கப்பட்டன.



மேலும், சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினர்களுக்கான நற்சான்றிதழ், மாநகர காவலர்கள் 61 பேருக்கும், மாவட்ட காவலர்கள் 66 பேருக்கும் வழங்கப்பட்டன.



சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்களுக்கான நற்சான்றிதழ் 136 பேருக்கும் வழங்கப்பட்டன.



இதனை தொடர்ந்து பள்ளி கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



விழாவில், கோயம்புத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல காவல்துறை ஐஜி சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும், குடியரசு தினத்தினை முன்னிட்டு மாவட்டத்திலுள்ள சுதந்திர போராட்ட தியாகிகளின் திருவுருவ சிலைகளுக்கு அந்தந்த வட்டாட்சியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

குடியரசு தின நிகழ்ச்சிகளை பார்ப்பதற்காக, கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த தேசபற்றாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் வ உ சி மைதானம் வந்திருந்தனர்.

Newsletter

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...