மேட்டுப்பாளையத்தில் நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரையில் வழக்கறிஞரை போலீசார் தாக்கியதைக் கண்டித்து மேட்டுப்பாளையத்தில் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்.


கோவை: மேட்டுப்பாளையத்தில் வழக்கறிஞர் சங்கம் சார்பில் நீதிமன்றத்தைப் புறக்கணித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் கீரைத்துரை காவல்நிலைய போலீசார் ராஜேஷ், ஸ்டாலின் என்ற இரண்டு வழக்கறிஞர்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்து இருவரையும் போலீசார் கடுமையாகத் தாக்கியதாகவும், இதில் அவர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.



இதனைக் கண்டித்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இன்று நீதிமன்ற பணிகளைப் புறக்கணித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் கூட்டமைப்பின் சார்பில் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு உடனடியாக வழக்கறிஞர்களை தாக்கிய காவல்துறையினரை கைது செய்ய வேண்டும், அவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும், மனித உரிமை மீறல்களில் பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்களுக்கு தொழில் பாதுகாப்பு மசோதாவை உடனடியாக சட்டமாக நிறைவேற்ற வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...