சூலூர் அருகே கார் விபத்து - ரோட்டரி சங்க மேனாள் தலைவரின் மனைவி பலி

கோவை மாவட்டம் சூலூரில் நிகழ்ந்த கார் விபத்தில், தாராபுரம் ரோட்டரி சங்கத்தின் மேனாள் தலைவர் சுந்தர்ராஜனின் மனைவி உயிரிழந்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ரோட்டரி சங்கத்தின் மேனாள் தலைவரும், இன்டர்நேஷனல் ரோட்டரி கிளப் ஏசியா கண்டத்தின் தலைவருமாக இருந்தவர் டாக்டர் சுந்தர்ராஜன்.



இவர், தமது மனைவி பிரிசில்லாவுடன் கோவையிலிருந்து தாராபுரம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். சூலூர் சாலையில் வந்துகொண்டிருந்தபோது, அந்த கார் திடீரென விபத்துக்குள்ளானது.

இதில், சுந்தர்ராஜனின் மனைவி பிரிசில்லா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். டாக்டர் சுந்தர்ராஜன் பலத்த காயங்களுடன் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், தாராபுரம் ரோட்டரி சங்கத்தின் சார்பில் மறைந்த பிரிசில்லா உடலுக்கு மலர் வளையம் வைத்து ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் மருத்துவர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...