சூலூர் அருகே கார் விபத்து - ரோட்டரி சங்க மேனாள் தலைவரின் மனைவி பலி

கோவை மாவட்டம் சூலூரில் நிகழ்ந்த கார் விபத்தில், தாராபுரம் ரோட்டரி சங்கத்தின் மேனாள் தலைவர் சுந்தர்ராஜனின் மனைவி உயிரிழந்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ரோட்டரி சங்கத்தின் மேனாள் தலைவரும், இன்டர்நேஷனல் ரோட்டரி கிளப் ஏசியா கண்டத்தின் தலைவருமாக இருந்தவர் டாக்டர் சுந்தர்ராஜன்.



இவர், தமது மனைவி பிரிசில்லாவுடன் கோவையிலிருந்து தாராபுரம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். சூலூர் சாலையில் வந்துகொண்டிருந்தபோது, அந்த கார் திடீரென விபத்துக்குள்ளானது.

இதில், சுந்தர்ராஜனின் மனைவி பிரிசில்லா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். டாக்டர் சுந்தர்ராஜன் பலத்த காயங்களுடன் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், தாராபுரம் ரோட்டரி சங்கத்தின் சார்பில் மறைந்த பிரிசில்லா உடலுக்கு மலர் வளையம் வைத்து ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் மருத்துவர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

திருப்பூர்: அமராவதி அணை 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி 32.95 அடி பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை ஜூலை 9ஆம் தேதி இன்று 45.8 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளது. வினாடிக்கு 297 கன அடி நீர்வ...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தென்மேற்கு பருவமழை காரணமாக நீர் வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அத...

தேசிய இணைய பரிமாற்ற மையத்தில் இணைய நிர்வாக பயிற்சிக்கு SRIT மாணவி தேர்வு

கோயம்புத்தூர் Sri Ramakrishna Institute of Technology மாணவி ஷாலினி ஏ., புது தில்லி தேசிய இணைய பரிமாற்ற மையம் (NIXI) வழங்...

விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்றவர் கைது - கோவை குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

அரசு வழங்கிய பட்டியலினருக்கான விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து ஏமாற்றியதாக எழுந்த புகாரில், கவுண்டம்பாள...

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...