சூலூர் அருகே கார் விபத்து - ரோட்டரி சங்க மேனாள் தலைவரின் மனைவி பலி

கோவை மாவட்டம் சூலூரில் நிகழ்ந்த கார் விபத்தில், தாராபுரம் ரோட்டரி சங்கத்தின் மேனாள் தலைவர் சுந்தர்ராஜனின் மனைவி உயிரிழந்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ரோட்டரி சங்கத்தின் மேனாள் தலைவரும், இன்டர்நேஷனல் ரோட்டரி கிளப் ஏசியா கண்டத்தின் தலைவருமாக இருந்தவர் டாக்டர் சுந்தர்ராஜன்.



இவர், தமது மனைவி பிரிசில்லாவுடன் கோவையிலிருந்து தாராபுரம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். சூலூர் சாலையில் வந்துகொண்டிருந்தபோது, அந்த கார் திடீரென விபத்துக்குள்ளானது.

இதில், சுந்தர்ராஜனின் மனைவி பிரிசில்லா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். டாக்டர் சுந்தர்ராஜன் பலத்த காயங்களுடன் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், தாராபுரம் ரோட்டரி சங்கத்தின் சார்பில் மறைந்த பிரிசில்லா உடலுக்கு மலர் வளையம் வைத்து ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் மருத்துவர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...

நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் சாலை வசதி கோரி பொதுமக்கள் முற்றுகை

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகவான் கார்டன் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக சாலை வசதி ஏற்படுத்தாததை கண...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 165 தொழில் முனைவோர்களுக்கு ரூ.83.20 லட்சம் மானியம் வழங்கல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr.K.சுப்பிரமணியன் மத்திய அரசின் RKVY-RAFTAAR-R-ABI திட்டத்தின் கீழ்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சங்க கால கடம்ப மரத்திலிருந்து மருத்துவ குணமுள்ள கடம்பின் பிரித்தெடுக்கும் முறைக்கு காப்புரிமை

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட கடம்ப மரத்திலிருந்து க...

திருப்பூர்: அமராவதி அணை 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி 32.95 அடி பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை ஜூலை 9ஆம் தேதி இன்று 45.8 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளது. வினாடிக்கு 297 கன அடி நீர்வ...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தென்மேற்கு பருவமழை காரணமாக நீர் வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அத...