உடுமலை அருகே சலங்கை மாடுகளுக்குப் பூஜை செய்து கிராம மக்கள்

குடிமங்கலம் அருகே சலங்கை மாடுகளுக்குப் பொதுமக்கள் பால், பழம் வைத்து பூஜை செய்து வழிபாடு.


திருப்பூர்: உடுமலை சுற்றுவட்டாரப் பகுதியில் கிராமங்கள் தோறும் இசைக்கேற்ப ஆடும் சலங்கை மாடுகளுக்குக் கிராம மக்கள் பூஜை செய்து வழிப்பட்டனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இசை கேட்ப ஆடும் வகையில், மார்கழி மாதம் முழுவதும் மாடுகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த வகை மாடுகள் சலங்கை மாடுகள் என்று அழைக்கப்படுகின்றன.

ஒவ்வொரு கிராமத்திற்கும் பொதுவாக வளர்க்கப்படும் சலங்கை மாடுகள் விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படுவதில்லை, கோவிலுக்குச் சொந்தமானது என்பதைக் குறிக்கும் வகையில் மாடுகளின் மீது சூலாயுதம் போன்ற குறிகள் காணப்படுகின்றன.

மாட்டுப்பொங்கல் அன்று பயிற்சி அளிக்கப்பட்ட சலங்கை மாடுகளுடன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இரண்டு குச்சிகளைக் கையில் வைத்து ஆள் கொண்ட பால கோவிலுக்குக் கொண்டு சென்று ஆடுகின்றனர்.



பின்னர் சலங்கை மாடுகளை தங்களது ஊர்களுக்குக் கொண்டு வந்து பொதுவான இடத்தில் அல்லது கோவில் பகுதியில் வைத்து பால், பழம் பொங்கல், வைத்து வழிபாடு செய்கின்றனர். கிராம மக்கள் சாமி பாடல்கள் தொடர்ந்து பாடும் பொழுது சலங்கை மாடு தானாகவே சென்று பால், பழம், பொங்கலைச் சாப்பிடுவது சிறப்பாகக் கருதப்படுகின்றது.



உடுமலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பாரம்பரியமாக கடைப்பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் குடிமங்கலம் அருகே பண்ணைக்கிணற்றில் கிராம மக்கள் பொதுஇடத்தில் பால், பழம், பொங்கல் வைத்து சலங்கை மாடுகளுக்குப் பூஜை செய்து வழிபட்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...