கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்பனை - ஒருவர் கைது!

காந்திபுரம் பேருந்து நிலைய பொது கழிவறை அருகே இரவு நேரங்களில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், புதிதாக கஞ்சா விற்பனையை தொடங்கிய இளைஞர் கைது.


கோவை: கோவை மாவட்டம் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பொது கழிப்பறை பகுதியில் இரவு நேரங்களில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக சுற்றி வந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். இந்த சோதனையில் அவரிடம் சுமார் 200 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நபர் கஞ்சா விற்பனை செய்ய முயன்ற சபரி (22) என்பது தெரியவந்தது. வெல்டிங் பணி செய்து வந்த இவர், கஞ்சா விற்பனையை தொடங்கிய நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில், இளைஞர்கள் இதுபோன்ற கஞ்சா விற்பனையில் சிக்கி தங்களது வாழ்க்கையை சீரழித்து கொள்ள வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...