உடுமலையில் மாட்டுவண்டியில் அமைச்சர் சாமிநாதன் பயணம் - ஆல்கொண்டமால கோயிலில் தரிசனம்!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகிலுள்ள ஆல் கொண்ட மால கோயிலுக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மாட்டுவண்டியில் சென்று சாமி தரிசனம் செய்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள சோமவாரப்பட்டியில் ஆல் கொண்ட மால கோவில் உள்ளது.



இந்தக் கோயிலுக்கு சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் மாட்டுவண்டிகளில் பயணித்து சாமி தரிசனம் செய்வது பாரம்பரியமாக நடைபெற்றுவருகிறது.

பொங்கல் பண்டிகையின்போது, இந்தக் கோயிலில் நடைபெறும் சலக்கெருது ஆட்டமும் மிகவும் பிரசித்திபெற்றது. இந்த ஆண்டுக்கான பொங்கல் திருவிழா கடந்த 16ஆம் தேதி தொடங்கியது.

இந்நிலையில், நிறைவு நாளான தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் மாட்டு வண்டியில் பயணம் செய்து, ஆல்கொண்டமால கோயிலுக்குச் சென்றார்.



அப்போது, கோயில் நிர்வாகம் சார்பில் அமைச்சருக்கு பரிவட்டம் கட்டி சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

Newsletter

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் ஆய்வு; நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் சரத்குமார்

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் ஆய்வு மேற்கொண்டு, முன்னாள் ப...