உடுமலையில் மாட்டுவண்டியில் அமைச்சர் சாமிநாதன் பயணம் - ஆல்கொண்டமால கோயிலில் தரிசனம்!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகிலுள்ள ஆல் கொண்ட மால கோயிலுக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மாட்டுவண்டியில் சென்று சாமி தரிசனம் செய்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள சோமவாரப்பட்டியில் ஆல் கொண்ட மால கோவில் உள்ளது.



இந்தக் கோயிலுக்கு சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் மாட்டுவண்டிகளில் பயணித்து சாமி தரிசனம் செய்வது பாரம்பரியமாக நடைபெற்றுவருகிறது.

பொங்கல் பண்டிகையின்போது, இந்தக் கோயிலில் நடைபெறும் சலக்கெருது ஆட்டமும் மிகவும் பிரசித்திபெற்றது. இந்த ஆண்டுக்கான பொங்கல் திருவிழா கடந்த 16ஆம் தேதி தொடங்கியது.

இந்நிலையில், நிறைவு நாளான தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் மாட்டு வண்டியில் பயணம் செய்து, ஆல்கொண்டமால கோயிலுக்குச் சென்றார்.



அப்போது, கோயில் நிர்வாகம் சார்பில் அமைச்சருக்கு பரிவட்டம் கட்டி சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...