கோவை கோவில்மேடு பகுதியில் அனல் பறந்த கபடி போட்டி

பொங்கல் திருநாளை முன்னிட்டு கோவை கோவில்மேடு பகுதியில் நடைபெற்ற கபடி போட்டியில் ஆக்ரோஷமாக விளையாடி திறமைகளை வெளிக்காட்டிய வீராங்கனைகள்.


கோவை: கோவில்மேடு பகுதியில் இளைஞர் மன்றம் சார்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு மகளிருக்கான கபடி போட்டி நடைபெற்றது.

கோவை தடாகம் சாலை கோவில்மேடு பகுதியில் இளைஞர் மன்றம் செயல்பட்டு வருகிறது. 1967ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இளைஞர் மன்றம் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளை முன்னிட்டு இருபாலருக்கும் கபடி போட்டி நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

இந்நிலையில் 56ஆவது ஆண்டு விழா, மன்றத்தின் புதிய கட்டிடம் திறப்பு விழா மற்றும் தை திருநாள் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாவட்ட அளவிலான ஆண், பெண் என இருபாலருக்கான கபடி போட்டி இன்று தொடங்கியது.



பெண்களுக்கான கபடி போட்டியில் கோவையைச் சேர்ந்த 10 அணிகள் மோதின. இதில் பெண்கள் அணியினர் நேர்த்தியான மற்றும் ஆக்ரோஷமான விளையாட்டை வெளிக்காட்டினர். வேகம், விவேகம் என கபடி விளையாட்டில் பெண்கள் அணியினர் தங்களது திறமைகளைக் காட்டி விளையாடியது பார்வையாளர்களை ஆச்சரியப்பட வைத்தது.



பொங்கல் திருநாளை ஊர்மக்கள், பெண்கள் என கபடி போட்டியை கண்டுகளித்துடன் களத்தில் பெண்களின் அனல் பறக்கும் ஆட்டத்தைக் கண்டு வியந்தனர். நாளை நடைபெறும் ஆண்களுக்கான கபடி போட்டியில் கோவையைச் சேர்ந்த 20 அணிகள் மோதவுள்ள நிலையில் ஆடுகளம் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் வெற்றி பெறும் அணிகளுக்குப் பரிசுத்தொகையும், கேடயம் மற்றும் கோப்பைகள் பரிசாக அளிக்கப்படவுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...