பொங்கல் தினத்தன்று வங்கித்தேர்வு - கோவையில் எம்.பி. சு.வெங்கடேசனுக்கு ஆதரவாகப் போராட்டம்!

பொங்கல் தினத்தன்று எஸ்.பி.ஐ வங்கித் தேர்வு அறிவித்திருப்பதை கண்டித்து நாடாளுமன்றமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கோவையில் மார்க்சிய பெரியாரிய அம்பேத்கரிய இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



கோவை: பொங்கல் பண்டிகை தினத்தன்று பாரத ஸ்டேட் வங்கி தேர்வை அறிவித்துள்ளது.



இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் நேற்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தப் போராட்டத்திற்கு தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.



இந்நிலையில், சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சு. வெங்கடேசனுக்கு ஆதரவாக, கோவை பாரத ஸ்டேட் வங்கி முன்பு நேற்றிரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில், மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய இயக்கத்தினர் உட்பட பல்வேறு அமைப்புகள் கலந்துகொண்டனர். மத்திய அரசுக்கு எதிராகவும், மத்திய நிதி அமைச்சருக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

தமிழக அரசின் கோரிக்கையினை ஏற்று சு. வெங்கடேசன் உள்ளிட்டோர் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர். இதையடுத்து, அடுத்தகட்ட போராட்டம் குறித்து விரைவில் முடிவு செய்வதாக கூறி கோவை SBI அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...