பொங்கல் தினத்தன்று வங்கித்தேர்வு - கோவையில் எம்.பி. சு.வெங்கடேசனுக்கு ஆதரவாகப் போராட்டம்!

பொங்கல் தினத்தன்று எஸ்.பி.ஐ வங்கித் தேர்வு அறிவித்திருப்பதை கண்டித்து நாடாளுமன்றமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கோவையில் மார்க்சிய பெரியாரிய அம்பேத்கரிய இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



கோவை: பொங்கல் பண்டிகை தினத்தன்று பாரத ஸ்டேட் வங்கி தேர்வை அறிவித்துள்ளது.



இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் நேற்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தப் போராட்டத்திற்கு தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.



இந்நிலையில், சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சு. வெங்கடேசனுக்கு ஆதரவாக, கோவை பாரத ஸ்டேட் வங்கி முன்பு நேற்றிரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில், மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய இயக்கத்தினர் உட்பட பல்வேறு அமைப்புகள் கலந்துகொண்டனர். மத்திய அரசுக்கு எதிராகவும், மத்திய நிதி அமைச்சருக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

தமிழக அரசின் கோரிக்கையினை ஏற்று சு. வெங்கடேசன் உள்ளிட்டோர் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர். இதையடுத்து, அடுத்தகட்ட போராட்டம் குறித்து விரைவில் முடிவு செய்வதாக கூறி கோவை SBI அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...