திருப்பூர் பல்லடம் அருகே பஞ்சு மில்லில் திடீர் தீ விபத்து - பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் தீக்கிரையாகின

பல்லடம் அடுத்த சின்ன வடுகபாளையம் பகுதியில் உள்ள பஞ்சு அரவை ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள இயந்திரங்கள், உதிரி பாகங்கள் மற்றும் பஞ்சு ஆகியவை தீயில் எரிந்து சேதமாகின.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் - பொள்ளாச்சி சாலையில் சின்ன வடுகபாளையம் கிராமத்தில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான பஞ்சு அரவை ஆலை உள்ளது. இந்த ஆலை வளாகத்தில், பழைய இயந்திரங்கள், மற்றும் இயந்திர உதிரி பாகங்கள் உள்ளிட்டவை திறந்த வெளியில் வைக்கப்பட்டு இருந்தது.



இந்நிலையில், இன்று நண்பகல் 12 மணியளவில் ஆலையில் இருந்து கரும்புகை வெளியேறியதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், அங்கு செல்வதற்குள் தீ மளமளவென அங்கிருந்த இயந்திரங்களில் பரவியது.



இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், கூடுதலாக மூன்று தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு, சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



இச்சம்பவத்தில், பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள், இயந்திர உதிரி பாகங்கள் மற்றும் பஞ்சு உள்ளிட்டவை தீயில் எரிந்து சேதமாகின. இந்த தீ விபத்து குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல்லடம் அருகே பஞ்சு மில்லில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு இயந்திரங்கள் உட்பட பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...