கோவையில் ஜுவல் ஒன் நிறுவனத்தின் 'பைன் டைமண்ட் ஜுவல்லரி' புதிய பிரிவு துவக்கம்

கோவை ஜுவல் ஒன் நிறுவனத்தில், 'பை டைமண்ட் ஜுவல்லரி' எனும் புதிய பிரிவு துவக்கப்பட்டு உள்ளது. கிராஸ்கட் ரோட்டில் அமைந்து உள்ள ஜுவல் ஒன் நிறுவனத்தில், 500 சதுர அடி பரப்பளவில், 'பைன் டைமண்ட் ஜுவல்லரி' என்ற வைர விற்பனை பிரிவு, புதியதாக துவக்கப்பட்டுள்ளது.



இது குறித்து ஜுவல் ஓன் முதன்மை நிர்வாக இயக்குனர் பி.ஜி.கிஷோர் பேசுகையில்:– எம்ரால்டு நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் ஜுவல் ஒன் நிறுவனத்தின், சிறந்த கட்டமைப்பு மற்றும் நவீன இயந்திரங்கள் மூலம், வைர நகை வடிவமைப்பு மற்றும் விற்பனையில், எங்கள் நிறுவனம் முன்னிலையில் இருந்து வருகிறது. 

எங்களது நிறுவனத்தில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடிவமைப்பாளர்கள் பணியாற்றி வருகின்றனர். வைரம் சார்ந்த அனைத்து பணிகளும், எங்கள் நிறுவனத்திலேயே நடைபெறுவதனால், குறைந்த  விலையில், வைரங்களை விற்பனை செய்ய முடிகிறது. 3.5 லட்சம் டிசைன்கள் தமிழகத்தில் 13 இடங்களில், ஜுவல் ஒன் கிளைகள் செயல்பட்டு வருகிறது. இதுதவிர, மும்பை, கேரளா, பெங்களூர், சிங்கப்பூர் மற்றும் மலேசிய உள்ளிட்ட வெளிநாடுகளிலும் கிளைகள் உள்ளது. 

புதிய பிரிவுகளில், நவீன மற்றும் பாரம்பரிய, கைவினை கலைஞர்களால் உருவாக்கப்பட்ட, தங்கம் மற்றும் பிளாட்டினத்துடன் கூடிய, 3.5 லட்சத்திற்கும் மேற்பட்ட வடிவமைப்பிலான, வைர நகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் மனநிறைவே, நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சீனிவாசனின், முக்கிய குறிக்கோளாகும். எனவே, எங்களது வாடிக்கையாளர்களுக்கு, நாங்கள் விற்பனை செய்யும் வைர நகைகளுக்கான தர சான்றிதழ் வழங்கப்படுகிறது. அதில், வைரத்தின் தரம், வண்ணம், எடை ஆகியவை இடம்பெற்றிருக்கும். மேலும், வாடிக்கையாளர்கள் வழங்கும் வடிவமைப்பினை 20 நாட்களில் செய்து தருகிறோம். துவக்க விழாவை முன்னிட்டு, ஒரு காரட் சவர நகைக்கு, ரூ.5 ஆயிரம் வீதம் தள்ளுபடி செய்யப்படுகிறது என தெரிவித்தார்.



விழாவில், நிர்வாக துணை பொதுமேலாளர் முத்துக்குமார், வைர பொருட்களின் தலைமை அதிகாரி சஞ்சேஷ், மார்க்கெட்டிங் தலைமை அதிகாரி விஜயக்குமார், மேலாளர் வாசுதேவ ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...