கோவையில் பிறந்த 5 மணி நேரத்தில் குழந்தையை புதரில் வீசிச் சென்ற கொடூரம்!

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே தனியார் மருத்துவமனையின் பின்புறம் உள்ள மைதானத்தில் பிறந்து 5 மணி நேரமே ஆன ஆண் குழந்தையை வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த வீரபாண்டி பிரிவில் உள்ள தனியார் மருத்துவமனையின் பின்புறம் மைதானம் ஒன்று உள்ளது.

அங்கு நேற்று மாலை 7 மணியளவில் புதர் பகுதியில் ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது.



இதையடுத்து அங்கிருந்தவர்கள் அருகில் சென்று பார்த்த போது புதருக்குள் பிறந்து 5 மணி நேரமே ஆன ஆண் குழந்தை தொப்புள் கொடி கூட சரியாக அறுக்கப்படாத நிலையில் கிடந்துள்ளது.

தொடர்ந்து அங்கிருந்தவர்கள் பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து வந்து முதலுதவி செய்தனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை நல்ல நிலையில் இருப்பதாகவும், அங்கு பால் புகட்டும் வசதி இல்லாததால் குழந்தையை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே குழந்தையை அங்கு வீசிச் சென்றவர்கள் யார் என பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...