கோவையில் பிறந்த 5 மணி நேரத்தில் குழந்தையை புதரில் வீசிச் சென்ற கொடூரம்!

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே தனியார் மருத்துவமனையின் பின்புறம் உள்ள மைதானத்தில் பிறந்து 5 மணி நேரமே ஆன ஆண் குழந்தையை வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த வீரபாண்டி பிரிவில் உள்ள தனியார் மருத்துவமனையின் பின்புறம் மைதானம் ஒன்று உள்ளது.

அங்கு நேற்று மாலை 7 மணியளவில் புதர் பகுதியில் ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது.



இதையடுத்து அங்கிருந்தவர்கள் அருகில் சென்று பார்த்த போது புதருக்குள் பிறந்து 5 மணி நேரமே ஆன ஆண் குழந்தை தொப்புள் கொடி கூட சரியாக அறுக்கப்படாத நிலையில் கிடந்துள்ளது.

தொடர்ந்து அங்கிருந்தவர்கள் பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து வந்து முதலுதவி செய்தனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை நல்ல நிலையில் இருப்பதாகவும், அங்கு பால் புகட்டும் வசதி இல்லாததால் குழந்தையை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே குழந்தையை அங்கு வீசிச் சென்றவர்கள் யார் என பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...