மறைந்த ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ திருமகன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்

மாரடைப்பு காரணமாக உயிரிழந்த ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ திருமகன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பின் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.


கோவை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மகனுமான திருமகன் நேற்றைய தினம் மாரடைப்பால் உயிரிழந்தார்.



இந்நிலையில், அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த திருமகன் உடலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.



இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருமகனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு சென்று, அங்கிருந்து சாலை மார்க்கமாக ஈரோட்டுக்கு சென்றார்.

இதையடுத்து அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமகன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மதிவேந்தன், கே.என்.நேரு மற்றும் எம்.பி. கனிமொழி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

கோவையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி, மேயர் கல்பனா ஆனந்தகுமார், உட்பட கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்டோரும் முதல்வருடன் ஈரோடு சென்று திருமகன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...