மறைந்த ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ திருமகன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்

மாரடைப்பு காரணமாக உயிரிழந்த ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ திருமகன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பின் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.


கோவை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மகனுமான திருமகன் நேற்றைய தினம் மாரடைப்பால் உயிரிழந்தார்.



இந்நிலையில், அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த திருமகன் உடலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.



இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருமகனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு சென்று, அங்கிருந்து சாலை மார்க்கமாக ஈரோட்டுக்கு சென்றார்.

இதையடுத்து அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமகன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மதிவேந்தன், கே.என்.நேரு மற்றும் எம்.பி. கனிமொழி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

கோவையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி, மேயர் கல்பனா ஆனந்தகுமார், உட்பட கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்டோரும் முதல்வருடன் ஈரோடு சென்று திருமகன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...